பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகளை கைவிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போர் 3வது நாளை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற இருந்த ஐபிஎல் லீக் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் நடைபெற இருந்த போட்டிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தொடரையே கைவிட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.