தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து 3 வது நாளாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 வது நாளாக விதிக்கப்பட்ட தடை காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கோடை வெயிலின் தாக்கத்தை மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை குறைத்தாலும், அருவியில் நீராட இயலாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் தூரத்தில் நின்றபடி அருவியின் அழகை ரசித்து வருகின்றனர்.