மக்கள் தினமும் விருப்பி உண்ணும் வாழைப் பழங்கள் கெமிக்கல் ஸ்ப்ரே மூலம் பழுக்க வைப்பது உடல்நலனுக்கு அச்சுறுத்துதலாக மாறியுள்ளது. அந்த வகையில் கடை ஒன்றில் உணவு பாதுகாப்பு அதிகாரி நடத்திய திடீர் சோதனையில் கெமிக்கல் ஸ்பிரேவுடன் கையும் களவுமாக கடை உரிமையாளர் மாட்டியுள்ளார். அவரிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி, இது வாழைப்பழமா? இல்ல கெமிக்கல் பழமா?.. எவ்ளோ நாளா நடக்குது இது.. எங்க அந்த ஸ்பிரே? என கேள்வி கேட்டதில் அந்த உரிமையாளர் ஆடிப்போனார்.