விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அன்புமணிக்கு இன்று லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.