நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கப்படும். இதற்கு நீங்கள் தகுதியானவர்களா? என்பதை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு Am I Eligible என்பதை கிளிக் செய்து, அதில் தேவையான தகவல்களைக் கொடுத்து சம்மிட் என்பதைக் கிளிக் செய்யவும். அதனைத் தொடர்ந்து, நீங்கள் தகுதியானவரா என்பது குறித்து தகவல் உங்களுக்கு கிடைக்கும்.