தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று (ஜன.20) கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்த பொழுது அருகே சிறுவன் ஒருவனும் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவனை அடிப்பதற்காக ஆட்டோ ஓட்டுநர் கையை நீட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ வீட்டின் படிக்கட்டில் கவிழ்ந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.