சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி தர இந்திய படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலை நிறுத்திக்கொள்ள இன்று மாலை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது நடந்து சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மீண்டும் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த மிஸ்ரி, பாகிஸ்தான் இந்த கண்டிக்கத்தக்கது என்றும், இதற்கு பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.