பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் பேரணி நடக்கிறது. பின்னர் தான் தொடங்கவுள்ள புதிய கட்சியின் பெயரை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அறிவிக்கிறார்.