திருச்சி: 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி டீ மாஸ்டர் பலி

567பார்த்தது
திருச்சி: 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி டீ மாஸ்டர் பலி
திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் முருகன் திருச்சி உறையூரில் உள்ள தனியார் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று உறையூரில் இருந்து தவளைவீரன்பட்டிக்கு தனது நண்பர் சிவசக்தி என்பவரது வீட்டில் துக்கம் விசாரிக்கச் செல்வதற்காக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறை தரகம்பட்டி மாநிலச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது தவளைவீரன்பட்டி அருகே வெள்ளாளப்பட்டி சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், முருகனின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முருகன் பலத்த காயமடைந்தார். 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி