பட்டப்பகலில் துணிகரம்... திருடனை துரத்திப் பிடித்த மக்கள்

61பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் கிராமம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் பொன்னுசாமி (வயது 65), இவரது மனைவி சம்பூர்ணம். நேற்று(செப்.20) சம்பூர்ணம் வயல் வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் பொன்னுசாமி அவரது வீட்டின் முன்பு இருந்த கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து 4 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் வெளியே வந்தபோது பொன்னுசாமி, அவர்களை பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது கொள்ளையர்கள் கொண்டு வந்த இரும்புராடால் அவரை கடுமையாக தாக்கி மிளகாய்த்தூள் தூவி தப்பி ஓடினர். இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்த நிலையில் கொள்ளையர்கள் வந்த இருசக்கர வாகனம் பழுதானதால் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு போட்டுவிட்டு தப்பி ஓடினர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் துரத்தி பிடித்ததில் அதில் ஒரு கொள்ளையர் மட்டும் சிக்கிக்கொண்டார். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து உடனடியாக பொதுமக்கள் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அழித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருடனை வாகனத்தில் ஏற்றினர். அப்போது பொதுமக்கள் காவல்துறையினரிடம் பட்டப்பகலில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே, கொள்ளையனிடம் ங்கள் முன் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி