பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில், பேருந்தில் ஏறிய பெண்ணின் கழுத்தில் இருந்த 2 பவுன் செயின் பறிப்பு, போலீசார் விசாரணை.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூர் அம்பேத்கார் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் ராஜு இவரது மகள் சின்னபிள்ளை வயது -57,
இவர் கீழப்புலியூரிலிருந்து அரசு நகர பேருந்தில் பெரம்பலூர் 4 ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மணிக்கு வந்து மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற்று மீண்டும் கீழப்புலியூர் செல்வதற்காக பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து 1 மணி நேரம் காத்திருந்து வைத்தியநாதபுரம் செல்லும் அரசு பேருந்தில் பின்புற படிக்கட்டில் கூட்ட நெரிசலில் பேருந்தின் மேல் ஏறி தனது கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் காணமல் போனது தெரிந்தது, உடனே தனது செயினை காணவில்லை என கூச்சலிட்டுள்ளார் பின்பு காவல் நிலையம் வந்து புகார் அளித்துள்ளார், இது குறித்து உதவி காவல் ஆய்வாளர் பாண்டியன் பெண் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.