தடுப்பு கட்டையில் மோதிய டூவீலர் - வாலிபர் பலி

1050பார்த்தது
தடுப்பு கட்டையில் மோதிய டூவீலர் - வாலிபர்  பலி
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே உள்ள அழகிய மணவாளன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 24. இவர் தனது டூவீலரில் திருப்பஞ்சலி கோவாதக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடி வாய்க்கால் புது பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டூவீலர் கட்டுப்பாட்டை இழந்ததில் அவர் சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு கட்டி மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்த தகவல் அறிந்த மணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி