அரியலூரை அடுத்த தத்தனூரில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஜெ. தத்தனூர் கீழவெளி தெற்கு தெருவில் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு தேர் திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.
இதில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
இதில் அலங்காரம் செய்யப்பட்ட மகா மாரியம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின் ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.