அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் தம்பிசிவம். இவரது மகன் சிவப்பிரகாஷ்(வயது 17). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிவப்பிரகாஷின் தந்தை, அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த சிவப்பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.