அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பட்டா மாற்றம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய 486 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்