அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காங்கேயன் குறிச்சி கிராமத்தில் சுமார் 100 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக சுத்தமாக தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் பேருந்து செல்லக்கூடிய பிலிச்சிகுழி கிராமத்தில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.