அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம் அரியலூர் தொழிற்சங்கம் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இதில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளம்மோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.