அரியலூர் மாவட்டம் செந்துறை அம்பேத்கார் நகர் சிலையிலிருந்து கூத்தங்குழி ஏரிக்கரை வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்தால் சாக்கடையை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதியோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த சாலையினை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.