திருநெல்வேலி மாவட்டம் வேப்பிலங்குளம் கிராம பஞ்சாயத்து செயலாளர் சங்கர் கொலைகள் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய கோரி இன்று ஒரு நாள் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் ஊராட்சி செயலாளர் தமிழ் குமரன் கருப்பு பேட்ச் அணிந்து பணிபுரிந்து வருகிறார்.