அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையர் கல்லாங்குளம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு விநாயகர் முருகன் மாரியம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் செவ்வாய்க்கிழமை அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் இன்று (பிப்.4) இடையர் கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் வேண்டுதல்கள் வைத்திருந்த பக்தர்கள், ஏரி கரையில் இருந்து சக்தி கரகம் சூடிக்கப்பட்டு வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து வேண்டுதலுக்காக சக்தி கரகம் மற்றும் பால் குடங்களை சுமந்தபடி மேளதளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக பால்குடத்தை எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் அன்னதானம் செய்தனர். இதில் கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷத்தில் ஓம் சக்தி பராசக்தி என கோஷங்களை எழுப்பியவாறு அம்மனை வழிபட்டனர். இதில் ஊர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.