மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை ஒட்டி அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி திருவாதிரை நாள் ராஜேந்திரசோழனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதை ஈடு செய்ய 17ஆம் தேதி (சனி) வேலை நாட்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.