600 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி

69பார்த்தது
அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 250 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, கோட்டாட்சியர் கோவிந்தராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தஞ்சாவூர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், சேலம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளுக்கும், மாடுப்பிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு களத்தில் அனுமதிக்கப்பட்டனர். வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடு பிடி வீரர்கள் துணிச்சலாக திமிலை பிடித்து அடக்கினர்..

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி