கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

77பார்த்தது
புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்.
புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் தொன்மையான பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலை ஏழைகளின் திருப்பதி என்று அழைப்பது வழக்கம். கிராமத்து விவசாயிகள் தங்களது வெள்ளாமை நோயின்றி நல்ல மகசூல் கிடைக்க, கலியுக வரதராஜ பெருமாளை வேண்டிக் கொண்டு விவசாயம் செய்கின்றனர்.

பின்னர் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, வயலில் விளைந்த தானியங்களையும், கால்நடைகளையும் நேரில் வந்து சாமி தரிசனம் செய்த பிறகு காணிக்கையாக செலுத்தி விட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையான இன்று அதிகாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் மூலவரான கம்ப வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ததோடு, உற்சவர் ஆன ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதியை குடும்பத்துடன் தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் தங்களதுஔ வயல்களில் விளைவித்த தானியங்களையும், ஆடு, மாடு, கோழிகளையும், காணிக்கையாக வழங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி