நகை கடன் கட்டுப்பாடுகளை வி லக்க ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
அரியலூர் - ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன் கட்டுப்பாடுகளை உடனே வாபஸ் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரியலூர் மாதா கோவில் முன்பு மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் விவசாயம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர் இந்நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கிகளில் பெறக்கூடிய நகைக்கடன் களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இது விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள நகை கடன் கட்டுப்பாடுகளை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் நகைக்கடன் வழங்குவதில் பழைய நடைமுறைகள் தொடர உத்தரவிட வேண்டும் என கோஷசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி