திருமானூர் அருகே ஆங்கியனூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக, ஜெயராமனின் கோழிப்பண்ணையில் ஒரு பகுதி தூக்கி எறியப்பட்டு சேதம் அடைந்தது. இந்த சூழ்நிலையில், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, தனக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளனர்.