அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில் Ashok Leyland சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது சுயவிவரம், ஆதார் அட்டை, புகைப்படம், சான்றிதழ்களை எடுத்துவர வேண்டுமென கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.