அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரம் முன்னேற்றத்தை நாடும் வட்டாரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வட்டாரத்திற்கு ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் (ABP Block Fellow) தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு கீழ்கண்ட தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கிராம வளர்ச்சி பற்றிய படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் இதர தகுதிகளாக தரவுகள் பகுப்பாய்வு, கணினி நுண்ணறிவு மற்றும் விளக்க திறன், திட்ட மேலாண்மை திறன், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் திறன், தகவல் தொடர்பு திறன், பணி முன் அனுபவம், ஆங்கிலம், வட்டார மொழிகள் அறிந்திருத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் ஓராண்டிற்கு மட்டும் உரியது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட மகமை, 2வது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் - 621704. விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2024. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.