அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அரசு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நெற்றியில் நாமமிட்டு மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்; குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6, 750 வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.