அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இம்மாத இறுதியில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடத்திடவும், வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.