இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வராது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உடனான போர் காரணமாக எரிவாயு, எண்ணெய் தட்டுப்பாடு எதுவும் வராது என்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. நம்மிடம் போதுமான அளவு அனைத்துமே கையிருப்பு உள்ளது. பாகிஸ்தானுடன் எந்தவொரு எரிவாயு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.