அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டது. சிகிச்சைக்குப் பின் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஞானசேகரனை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடியதில் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.