பனையூர் அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2-ம் நாளாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதுவையில் நடந்த பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு இடையே மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி தனியாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், 2வது நாளாக அன்புமணி, பாமக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.