தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பழைய காற்றாலைகளை நீக்கிவிட்டு, அந்த இடங்களில் 'ஹைபிரிட்' முறையில், பொது - தனியார் பங்கேற்பு வாயிலாக காற்றாலையுடன் சூரியசக்தி மின் நிலையங்களை சேர்த்து அமைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், பகலில் சூரியசக்தி மின்சாரமும், சீசன் காலத்தில் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும். ஏற்கனவே மின் வழித்தடம் இருப்பதால், புதிய வழித்தடம் அமைக்க தேவையில்லை.