சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள பத்ரகாளி கோயிலின் தற்காலிக ஊழியராக இருந்த அஜித்குமார் கடந்த ஜூன் 28இல் காவல்துறையின் விசாரணையின்போது மரணமடைந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது போலீசாரின் தாக்குதலில் நவீன் காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வலியை போக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்படுகிறது.