இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் காரணமாக இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அனைத்து விதமான தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் தனது பலத்தால் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், சண்டிகரில் வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மின் இணைப்பை துண்டித்து பத்திரமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.