3 அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம்

73பார்த்தது
3 அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம்
அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகிய 3 பேர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களையும், மதங்களையும் ஆபாசமாக பேசியதற்காக அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற ஊழலுக்காக அமைச்சர் கே.என்.நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி