தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 17) பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன. பட்ஜெட் அறிக்கைகள் மீதான விவாதம், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ளன. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவு தருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையில் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.