திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் எட்டாவது வார்டு அதிமுக வட்டச் செயலாளராக இருப்பவர் ராஜசேகர். இவரை, அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில், படுகாயமடைந்த ராஜசேகர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.