இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடுமையான
போர் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தனியாக வெளியே செல்ல வேண்டாம், இந்திய தூதரகம் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில்
போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜெருசலம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.