பழனியில் ரோப்காரை கூடுதல் நேரம் இயக்க நிர்வாகம் முடிவு

51பார்த்தது
கோடை விடுமுறை காரணமாக உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு இயக்கப்படும் மின்இழுவை ரயில் மற்றும் ரோப்காரில் செல்ல பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையில் ரோப்கார் சேவையை கூடுதல் நேரம் இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இனி காலை 6.30 மணி முதல் இயக்கப்படும். மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணிக்காக அதன் சேவை நிறுத்தப்படும். அதன்பிறகு இரவு 10 மணி வரை இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி