ஆடி மாதம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆடி அமாவாசையானது ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்றது. இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என இப்பதிவில் பார்க்கலாம். ஆடி அமாவாசை நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு வயதானவர்களுக்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்குங்கள். குறைந்தபட்சம் 11 பேருக்காவது அன்னதானம் வழங்கினால், முன்னோர்களின் சாபம் நீங்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தோல்விகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.