தங்கக்கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவ் குறித்து கர்நாடகா BJP MLA பசங்கவுடா பாட்டீல் தெரிவித்துள்ள ஆபாச கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "ரன்யா ராவ் உடலில் துளைகள் இருந்த இடங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தினாள். அவளுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல்களை நான் சேகரித்துள்ளேன். அவள் தங்கத்தை எந்த துளையில் மறைத்து கொண்டு வந்தாள் என்பது உட்பட அனைத்தையும் நான் அம்பலப்படுத்துவேன்" என்று கூறியுள்ளார்.