மணிப்பூர் பிரச்சனையின் போது ஏன் அமைதியாக இருந்தீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கேள்வியெழுப்பியுள்ளார். "கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அதிகமான இறப்புகள் பதிவான போது பால்கனியில் நின்று விளக்குகளை ஏற்ற எங்களிடம் கேட்டது ஏன்? கொரோனா தடுப்பூசி தொடர்பான திட்டமும், கொள்கையும் ஏன் தோல்வியில் முடிந்தது? இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள்” என கேட்டுள்ளார்.