சென்னை உயர் நீதிமன்றம், புதிய திரைப்படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களிடையே ஓடிடி தளங்களில் சினிமா பார்க்கும் பழக்கம் அதிகரித்திருப்பதால் திரையரங்குகள் வெகு காலம் நீடிக்காது என்பதை திரையரங்க உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே குழுக்களை அரசாங்கம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.