இந்தியாவை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், போர்க்கால கொள்முதலுக்கான விதிகளை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருந்துகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து கொள்முதல்களும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.