கடலுார்: கேசவநாராயணபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (31) உள்ளிட்ட ஐவர் நேற்று (பிப். 10) ஒரே பைக்கில் சென்றனர். அப்போது பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர் சுந்தர்ராஜன் என்பவரின் மகன் சுனில்ராஜ் (17) என்பதும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.