ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு விரைவில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். போலி ஐஆர்சிடிசி கணக்குகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே விரைவில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இ-ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த உள்ளது என்றும் இது உண்மையான பயனர்களுக்கு, தேவைப்படும்போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.