உ.பி: வாரணாசியில் 19 வயது இளம்பெண் ஒருவரை 6 நாட்கள் அடைத்து வைத்து 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பலாத்காரம் செய்யப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு ஹெபடைடிஸ்-பி தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த தொற்றால் குற்றம்சாட்டப்பட்ட நபர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.