மத்தியபிரதேசத்தில் 22 வயது இளம்பெண் சினேகா ஜாட் கல்லூரியில் படித்து வந்தார். அவரின் நெருங்கிய நண்பர்களாக தீபக் மற்றும் அபிஷேக் இருந்த நிலையில் நேற்று முன்தினம் அபிஷேக்கின் செல்போன் அழைப்பையடுத்து சினேகா மற்றும் தீபக் கோயிலுக்கு சென்றனர். அப்போது அபிஷேக், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சம்பவத்திற்கு காரணம் முக்கோண காதல் என தெரியவந்துள்ளது.