பஞ்சாப் மாநிலத்தை குளிர் உலுக்கி வருகிறது. குளிர் காலநிலையால், வெப்பம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. காலையில் பனிமூட்டமாக உள்ளது. வெளியில் செல்லவே மக்கள் நடுங்குகின்றனர். இதையடுத்து, 10ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, 8ம் தேதி முதல், 14ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.